Saturday, 31 August 2019

drbala avalurpet

குழந்தைக்கான மருத்துவ பதிவு:

             குழந்தைகளின் முதல் மருத்துவரே தாய்தான்.
முதலில் தாய், தன் உடம்பை, ஆரோக்யமாக வைத்துக் கொண்டால்
மட்டுமே,
பால் குடிக்கும் குழந்தைகளும் ஆரோக்யமாக வளரும் .

     ஒரு குழந்தையின், எந்த ஒரு நோய்கக்கும், காரணம் வயிற்றுக் கோளாறும், நெஞ்சு சளியும் ,தான்

 முதலில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,,,!
நெஞ்சில் சளி இருந்தால் சரியாக செறிமானம் ஆகாது.
செரிமானம் சரியில்லையென்றால் உடல் கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும் .

   ----- மலச்சிக்கல்கான மருந்து------

வேப்பங் கொழுந்து----10கிராம்
அதிமதுரம்              ----10 "
அச்சு வெல்லம்      ----10 "
     சேர்த்து அரைத்து நெய்யில் கலந்து 1ஸ்பூன் உண்ண கொடுக்க பேதியாகும்.
மூன்று தடவை பேதியாகி நிற்காவிடில்
சிறிது புளித்த மோர், அல்லது எலுமிச்சை ஜீஸ், சிறிது கொடுத்தால் நிற்கும்.
               ---------------

                 குழந்தைகள் உண்டாகும்
வயிற்றுப் போக்கை நிருத்த.

வசம்பு                   ----10 கிராம்
சுக்கு                      ----10 "
ஓமம்                     ----10 "
மஞ்சள்                 ----10 "
பெருங்காயம்      -----10 "
 நன்கு வறுத்து தூள் செய்து

வயிறு உப்பியிருந்தால் விளக்கெண்ணையிலும்

வயிறு சாதாரணமாக இருந்தால் தேனிலும் 1/2ஸ்பூன் கலந்து கொடுக்க பேதியாவது உடனே நின்று  விடும்.
                       -------------
             அடிக்கடி வாந்தியெடுத்தால்
புதினா இலையை நீரில் கொதிக்க வைத்து கொடுங்கள் சரியாகும்.
                      --------------
-----கரப்பான் சொறி சிரங்கு------
கோழி முட்டை வெண்கருவை உடல் முழுவதும் தேய்த்து காய்ந்ததும் குளிக்க வைக்கவும்
தினம் 1 தடவை 15நாளில் சரியாகும்.
                    ----------------
------கக்குவான் இருமல்--------
சிறிது படிகாரத்தை பொரித்து 2 குன்றிமணி எடை சுடு நீரில் கரலந்து 3 வேளை 6 நாள் கொடுக்க சரியாகும்.
                 ------------------
கை ககால் மூட்டிகளில் வேற்குரு போல் இருந்தால்
கடுக்காய் ---------
சீரகம்       ---------
கற்றாழை---------
சமமாக கலந்து அரைத்து 2 வேளை
3 நாள் உண்டால் சரியாகும்.

-----பொதுவான குறிப்புகள்-------

பசித்தால் மட்டுமே உண்ண சொல்லுங்கள்.
செரிக்கும் உணவுகளை மட்டுமே தேர்ந்தேடுங்கள்.

   கண்டிப்பாக வாரம் ஒரு முறை
வெற்றிலை --------1
பூண்டு பல்   --------1
வேப்பம் கொழுந்து--கொஞ்சம்

தேவையான நீர் விட்டு அரைத்து வடிகட்டி
கைக்குழந்தைக்கு --------1/2சங்கு
1 - 3 வயது " " "    --------1.      "
3 - 6 வயது " " "    --------2.      "
6 - 10வயது  " "    --------30 மில்லி
10 - 18 வயது "    --------60.    "
கொடுத்து வந்தால் நெஞ்சியிலுள்ள சளி கிருமிகள் எல்லாம் மலத்துடன்
வெளியேறி விடும்.
(வெற்றிலை, வெள்ளைப் பூண்டு, வே.கொழுந்து, தேவைக்கு கூட்டிக் கொள்ளவும்)

 ---கண்டிப்பாக மாதம் ஒரு முறை---
      காலை எழுந்ததும் வென்னீரில்
                கடுக்காய் பொடி
கைக்குழந்தைக்கு---தேவையில்லை
1 - 3 வயது --------1/2 ஸ்பூன்
3 - 6.    "      --------1.         "
6 - 10.  "      --------1,1/2.   "
10 - 18 "     --------2.           "
கலந்து குடித்தால் 1/2 மணிக்குள் பேதியாகி வயிறு சுத்தமானதும் பேதி தானே நின்று விடும்.

இவற்றை சரியாக கடை பிடித்தாலே நோய்கள் நெருங்காது.

No comments:

Post a Comment

drbala avalurpet