Wednesday, 7 August 2019

drbala siddha

இருதயநோய்களுக்குசிறந்த மருந்தாகும்

குணஜோதி லேகியம்
சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, தாளிச பத்திரி, சீமை அத்திப் பழம், பறங்கிப்பட்டை, தான்றிக்காய் வகைக்கு 20 கிராம் ஏலரிசி, சாதிக்காய், சாதிப்பத்திரி, சீரகம், கொத்தமல்லி வகைக்கு 10 கிராம், அமுக்கிராக்கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, கோரைக் கிழங்கு, திராட்சைப்பழகு (விதை நீக்கியது) விளாம்பழம் வகைக்கு 50 கிராம், பேரிச்சம் பழம் 100 கிராம், பசும்பால் ஒன்றரை லிட்டர், நெய் கால் கிலோ, பனைவெல்லம் 1 கிலோ, தேன் 150 கிராம், அறுகுசமூலம் இடித்துப் பிழிந்த சாறு ஒன்றரை லிட்டர்.
செய்முறை: அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகிலே சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.
தீரும் நோய்கள்: இருதயநோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான இராஜ கருவிகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு தேஜஸை உண்டாக்கும்.

No comments:

Post a Comment

drbala avalurpet